பெருந்தோட்ட துறை தொழிலாளர்களின் அடிப்படை சம்பள அதிகரிப்பு தொடர்பிலான விஷேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் தொழில்¸ தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் தயாகமகே உடன் மேற்படி அமைச்சில் இன்று நடைபெற்றுள்ளது.
இதன் போது பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட இ.தொ.கா வின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.