புதிய அரசியலமைப்பானது சமஷ்டிக்கான அரசியலமைப்பு என்று சொல்லமுடியாது என கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட சிரேஷ்ட விரிவுரையாளர் அ.சர்வஸே்வரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அச் செவ்வியில் அவர் தெரிவித்துள்ளதாவது,
தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது, வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சுயநிர்ணய உரிமையோடு கூடிய ஒரு சமஷ்டி முறையிலான தீர்வையே.
ஆனால் இவ்வாறான அம்சத்தையுடைய ஆலோசனைகள் இப்புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனையில் முன்வைக்கப்படவில்லை.
இப்புதிய அரசியலமைப்பு ஆலோசனையில் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய விடயங்கள் இல்லாவிட்டாலும் பல முன்னேற்றகரமான அம்சங்கள் இருக்கின்றன.
இதுவொரு சமஷ்டிக்கான அரசியலமைப்பு என்று சொல்லமுடியாது. ஆனால் இப்போது இருக்கும் நிலையிலிருந்து சற்று முன்னேற்றகரமான பல ஏற்பாடுகளுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனாலும் இந்த ஆலோசனையிலிருந்து எந்தளவு அரசியலமைப்புக்குள் உள்வாங்கப்படுமென்பதும் சந்தேகத்துக்குரியதே என்றார்.