எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர் நிறுத்தப்படுவார் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பெங்களூரில் நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான எதிர்கால உறவுகள் என்ற தலைப்பில் மகிந்த ராஜபக்ச சிறப்புரையாற்றியுள்ளார்.
இதன் பின்னர் அங்கு எழுப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படும் அந்த வேட்பாளரின் வெற்றியின் பின் தற்போதுள்ள அரசியலமைப்பு சட்டத்தை திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.