அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷக்களில் ஒருவர் வெற்றி பெறுவாரென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா பொது ஜன மகளிர் முன்னணியின் தொகுதி செயற்குழு கூட்டம் திஸ்ஸமஹாராமவில் இன்றைய தினம் இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே, நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி இதனை குறிப்பிட்டார். இதன் போது தொடர்ந்தும் பேசிய அவர்,
“அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியில் யார் வேட்பாளராக களமிறங்கினாலும் அவர்கள் தோல்வியடைவது உறுதி” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.