இலகுவாக ஆட்சி செய்வதற்கு ஆட்சியாளர்கள் குல பேதம், மத பேதம், இன பேதம் என்று பிரித்து மக்களின் எண்ணங்களில் நுழைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
எப்போதும் பெரும்பான்மைக் கருத்தை நடைமுறைப்படுத்தச் சென்றால் அது ஜனாநாயகத்தின் இறுதியாகும். இன்று இலகுவாக ஆட்சி செய்வதற்கு ஆட்சியாளர்கள் குல பேதம், மத பேதம், இன பேதம் என்று பிரித்து மக்களின் எண்ணங்களில் நுழைத்துள்ளது.
இதேவேளை, பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றால் பெரும்பான்மையினரின் எண்ணத்தினை நிறைவேற்ற வேண்டும் என பலர் எண்ணினாலும், சிறுபான்மைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பெரும்பான்மையினரின் கருத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.