மன்னாருக்கு இன்றையதினம் விஜயம் செய்துள்ள அமைச்சர் சஜித் பிரேமதாஸ மன்னார் ஜோசப்வாஸ் நகர் இளைஞர்களுடன் சிறிது நேரம் உதைப்பந்தாட்ட விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஜோசப்வாஸ் நகரில் நிர்மாணிக்கப்பட்ட 239ஆவது மாதிரி கிராமமான ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்ட 68 வீடுகளும், 230ஆவது மாதிரிக்கிராமமான ஜோசப் புரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட 27 வீடுகளும் இன்று காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு முடிவடைந்த நிலையில் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை விளையாட்டு மைதானத்தில் இளைஞர்களுடன் அமைச்சர் சஜித் பிரேமதாச உதைப்பந்தாட்டத்தில் ஈடுபட்டார்.
இதன் போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மேகன்ராஸ், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அமைச்சர் ரிசாட் பதியுதீனின் செயலாளர் றிப்கான் பதியுதீன், மன்னார் பிரதேச சபையின் தலைவர் எம்.முஜாகிர், ஐக்கிய தேசியக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ஏ.எஸ்.எம்.பஸ்மி மற்றும் பெருமளவான பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.