தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் யாழ். மாவட்ட உறுப்பினர்களுக்கான சமகால அரசியல் தொடர்பான உரையரங்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தெளிவூட்டல் உரையரங்கு இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் துணை பொதுச் செயலாளர் சண் தயாளன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் இவ் உரையரங்கில் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் நிலைப்பாடு தொடர்பிலான கருத்துக்கள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பில் கருத்துக்களை முன்வைத்து உரையாற்றியுள்ளார்.
இதில் ஜெனிவா-உண்மைகளும் மாயைகளும் என்ற தலைப்பில் அரசியல் கருத்தியலாளர் நிலாந்தன், ஊடகங்கள் சொல்லும் அரசியலைப் புரிந்து கொள்ளல் என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைகழக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் சி.ரகுராம், வழிவரைபடம் இல்லாத தமிழ்த் தேசிய அரசியல் என்ற தலைப்பில் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் உள்ளிட்ட பலர் உரையாற்றியுள்ளனர்
இவ்வுரையரங்கில் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் மற்றும் பல பொதுமக்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.