இலங்கை அரசின் இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அனைவரும் கரம் கோர்ப்போம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு தரப்பு மற்றும் இராணுவ தரப்பின் அச்சுறுத்தலுக்கு பயந்தே துணைவேந்தரால் நினைவுத்தூபி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடித்து அழிக்கப்பட்டுள்ளமை எமக்கு தெரியவந்துள்ளது.இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடித்து அழிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களால் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்றையதினம் இடிக்கப்பட்ட குறித்த நினைவுத்தூபியை மீண்டும் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரால் நாட்டப்பட்டது.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,