நாடாளுமன்றத்தில் கூறப்படும் விடயங்களை நீதிமன்றத்திற்குக் கூட சவாலுக்கு உட்படுத்த முடியாது.
அவ்வாறிருக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ நாடாளுமன்றத்தில் கூறிய விடயங்களுக்காக ஜனாதிபதி உயிர் அச்சுறுத்தல் விடுப்பது பொருத்தமானதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அத்துடன் லசந்த விக்ரமதுங்க, பிரகீத் எக்னலிகொட மற்றும் வசீம் தாஜுடீன் ஆகியோரின் நிலைமையா எதிர்காலத்தில் ஹரீனுக்கும் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகை கண்ணோட்டம்,