அம்பாறை மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்களில் தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு விசேட ஆராதனை வழிபாடுகள் நடைப்பெற்று வருகின்றன.
அந்தவகையில், கல்முனை மாநகரில் அமைந்துள்ள ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்திலும், கண்ணகையம்மன் ஆலயத்திலும், அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்திலும், வீரமுனை சிந்தா யாத்திரை பிள்ளையார் ஆலயத்திலும், விசேட வழிபாடுகள் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.