தேசிய இராணுவ வீரர்கள் தின நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அதிகாரசபையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் பிரியங்க நாப்பாகொட தெரிவித்துள்ளார்.
இதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பங்களிப்புடன் எதிர்வரும் 19ஆம் திகதி பத்தரமுல்லையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
யுத்த காலத்தில் நாட்டிற்காக உயிர் நீத்த இராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.