யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் அதே இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியைக் கட்டுவதற்குத் துணைவேந்தர் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதாக உறுதியளித்துள்ளார்.
இதனை அடுத்து உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை நிறைவு செய்வதற்குச் சம்மதித்துள்ளார்கள் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை 3 மணியளவில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள மாணவர்களைச் சந்தித்த மாணவர்களைச் சந்தித்த துணைவேந்தர் இந்த வாக்குறுதியை வழங்கியிருக்கிறார்.
அதன்படி முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் இன்று காலை நினைவுத்தூபி கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளது.