யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்றைய தினம் நடத்தப்பட்ட வடகிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு முஸ்லீம் சமூகம் தங்களது பூரண ஆதரவை வழங்கியுள்ளது.
குறிப்பாக ஏறாவூர் நகர முஸ்லீம் வர்த்தகர்கள் தங்களது அத்தியாவசிய கடைகளையும் மூடி ஆதரவு வழங்கியுள்ளனர். 75 வீதமானோர் போராட்டத்திற்கு ஆதரவாக கடைகளை மூடி ஆதரவு வழங்கியுள்ளனர்.