தகவலறியும் உரிமைச் சட்டம் அடுத்த வருடம் அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி தகவலறியும் உரிமை சட்டம் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.