முன்னாள் ஜனாதிபதி டீ.பீ.விஜயதுங்கவின் மகளான சித்திராங்கனி குமாரி விஜயதுங்க இன்று (22) அதிகாலை காலமானார்.
கண்டி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார்.
திடீரென ஏற்பட்ட நோய் நிலை காரணமாக நேற்று மாலை அவர் கண்டி மருத்துனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை அவர் தனது 61 வயதில் காலமாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.